உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் ஒருபுறம் உயிரிழப்புக்களை ஏற்படுத்தி வருகின்ற நிலையில், மறுபுறம் ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் லாசா வைரஸ் 144 பேரின் உயிர்களை காவுகொண்டுள்ளது.
மேலும், நைஜீரியாவில் நடப்பு ஆண்டு முதல் இதுவரை 855 பேருக்கு வைரஸ் காய்ச்சல் பரவியுள்ளதாக நைஜீரியா மத்திய நோய்க்கட்டுப்பாட்டு மையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
1969ஆம் ஆண்டு நைஜீரியாவின் லாசா நகரில் இந்த வைரஸ் காய்ச்சல் அடையாளம் காணப்பட்டதால் அதற்கு ”லாசா காய்ச்சல்” என்று பெயரிடப்பட்டது.
இந்த வைரஸ் காய்ச்சலுக்கு கடந்த 2012ஆம் ஆண்டில் மட்டும் 112 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், நைஜீரியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் மீண்டும் லாசா காய்ச்சல் பரவத்தொடங்கியுள்ளது.
லாசா காய்ச்சல் என்பது லாசா வைரசால் ஏற்படும் ஒரு கடுமையான ரத்தக்கசிவு நோயாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply