நாட்டில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளும் ஏப்ரல் 20ஆம் திகதி வரை மூடப்படுவதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும சற்றுமுன்னர் அறிவித்துள்ளார்.
அதன்படி நாளை 13ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 20ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கோரோனா வைரஸ் தொற்று தொடர்பில் அச்சநிலை காணப்படுவதாகவும் அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் நாளை தொடக்கம் வரும் மார்ச் 26ஆம் திகதிவரை பாடசாலைகள் மூடப்படுவதாக செய்திகள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply